ஈரானுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு; ஹோர்முஸ் ஊடாக இந்திய கப்பல்களின் பயணத்துக்கு அனுமதி

ஈரான் அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதியளித்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
ஈரானுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு; ஹோர்முஸ் ஊடாக இந்திய கப்பல்களின் பயணத்துக்கு அனுமதி

ஈரான் அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதியளித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தப் போரில் அழுத்தத்தை உருவாக்கும் விதமாக, உலகளாவிய தேவையில் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம்
நடக்கும் கடல்வழிப்பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது.

இதனால், இந்திய கப்பல்கள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு சொந்தமான கப்பல்கள் வளைகுடா கடல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக, பல நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், போர் தீவிரமடைந்த நிலையிலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதியளித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயற்சிக்கும் கப்பல்களை தாக்குவோம் என்று ஈரான் கூறியிருந்தது.

இப்படிபட்ட சூழலில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்ஷியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பேரில், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவின் அடிப்படையில் இந்திய கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், புஷ்பாக் மற்றும் பரிமால் ஆகிய இரு இந்திய சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து, இந்தியரை கப்டனாகக் கொண்ட லைபீரியாவைச் சேர்ந்த எண்ணெய் கப்பல், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் தடையின்றி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.