டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை… இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அபூர்வ சாதனை

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் புதிய வரலாறு படைத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் செய்யாத ஒரு அபூர்வ சாதனையை இந்திய அணியின் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் நிகழ்த்தினர்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை… இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அபூர்வ சாதனை

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் புதிய வரலாறு படைத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் செய்யாத ஒரு அபூர்வ சாதனையை இந்திய அணியின் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் நிகழ்த்தினர். ஒரே போட்டியில் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் தலா 50 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறை என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இந்த முக்கியமான போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்கினார். அவர் 45 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். 33 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அவர், இந்திய அணியின் ரன் வேகத்தை தொடர்ந்து உயர்த்தினார். 15.1 ஓவர்களில் இந்திய அணி 203 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, 89 ரன்கள் எடுத்த நிலையில் சாம்சன் ஆட்டமிழந்தார்.

இதே போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா அதிரடியான இன்னிங்ஸை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். கடந்த சில போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாத அவர், இறுதிப் போட்டியில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மொத்தமாக 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில், 7.1 ஓவர்களில் இந்திய அணி 98 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.

அதேபோல் மூன்றாவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷனும் அதிரடி ஆட்டம் காட்டினார். அவர் வெறும் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்த உதவினார். இறுதியாக 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தபோது, 15.5 ஓவர்களில் இந்திய அணி 204 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் தலா 50 ரன்களுக்கு மேல் எடுத்த சாதனையை சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இணைந்து நிகழ்த்தினர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனை ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.