இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்... பிசிசிஐ செய்த தவறு... வார்னர் சொன்ன தகவல்!

Key Points
  • பிசிசிஐ தான் அந்த முடிவை எடுத்தது என்பதால் இந்திய அணியின் தோல்விக்கு பிசிசிஐ தான் காரணம்.
இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்... பிசிசிஐ செய்த தவறு... வார்னர் சொன்ன தகவல்!

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் வீரரான டேவிட் வார்னர் வெற்றி பெற்றது குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். 

இறுதிப் போட்டியை உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடத்தியது தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என தெரியவந்துள்ளது. 

பிசிசிஐ தான் அந்த முடிவை எடுத்தது என்பதால் இந்திய அணியின் தோல்விக்கு பிசிசிஐ தான் காரணம்.

இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஆஸ்திரேலியா மிக எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா அணி மிக எளிதான திட்டத்தை முன்வைத்து வெற்றி பெற்றதாக டேவிட் வார்னர் கூறி இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் ஆடியதால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய அணியில் உள்ள பிட்ச்களை மிக எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் பிட்ச் எவ்வாறாக இருந்தாலும் அதை சமாளித்து ஆடும் திறன் ஆஸ்திரேலிய அணிக்கு இருப்பதாக அவர் கூறினார்.

இறுதிப் போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்தின் பவுண்டரி எல்லை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தின் பவுண்டரி எல்லை அளவுக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டார். 

அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் எப்படி ஆடுவோமோ அதேபோல் இங்கேயும் ஆட தாங்கள் திட்டமிட்டதாக வார்னர் குறிப்பிட்டார்.

பந்து வீசும் போது ஷார்ட் லென்த் பந்துகளை அதிகம் வீச வேண்டும் என்றும் பேட்டிங் செய்யும்போது அதிக தூரம் கொண்ட பவுண்டரி எல்லைகளை நோக்கி பந்தை அடித்து விட்டு இரண்டு ரன்கள் ஓட வேண்டும் என  திட்டமிட்டு வெற்றி பெற்றதாக டேவிட் வார்னர் சொல்லி உள்ளார்.

இதன் மூலம் பிசிசிஐ செய்த மிகப்பெரிய தவறு தெரியவந்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்போன் கிரிக்கெட் மைதானம் இருந்ததுடன், அங்கு ஒரு லட்சம் ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை பார்க்க முடியும்.

அதைவிட மிகப்பெரிய மைதானத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்ட பிசிசிஐ அகமதாபாத்தில் 1,32,000 பேர் அமரும் வகையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை போன்ற அந்த மைதானம் ஆஸ்திரேலிய அணிக்கு பழக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும் என்பதை  பிசிசிஐ மறந்து விட்டது.

மும்பை வான்கடே மைதானத்தை இறுதிப் போட்டிக்கான மைதானமாக பிசிசிஐ தேர்வு செய்திருக்கலாம். அங்கு தான் இந்தியா 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்றது. 

அதை செய்யாமல் உலகின் பெரிய மைதானத்தில் தான் இறுதிப்போட்டியில் நடத்துவோம் என அகமதாபாத் மைதானத்தை தேர்வு செய்ததால் இந்திய அணி 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து உள்ளதாக பார்க்கப்படுகின்றது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google