ஐந்து சதம் அடித்தும் இந்திய அணி தோற்றது ஏன்... தோல்விக்கான காரணங்கள் என்ன... கடைசி நாளில் நடந்தது என்ன?

Key Points
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்த நிலையில், ஆற...
ஐந்து சதம் அடித்தும் இந்திய அணி தோற்றது ஏன்... தோல்விக்கான காரணங்கள் என்ன... கடைசி நாளில் நடந்தது என்ன?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்த நிலையில்,  ஆறு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி  364 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து, 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்ததுடன், பென் டக்கட்149 ரன்கள் குவிக்க,  இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக ஐந்து சதம் அடித்தும் தோல்வியை தழுவி இருக்கின்றது. இந்திய வீரர்களின் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டாலும், கீழ் வரிசை வீரர்கள் சொதப்பியது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

முதல் இன்னிங்ஸில் 430 ரன்கள் எடுத்திருந்தபோது நான்காவது விக்கெட்டாக சுப்மன் கில் ஆட்டம் இழந்தார். ஆனால், அடுத்து 31 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 471 ரன்களில் எல்லாம் சுருண்டது. 

ஒருவேளை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தால் இந்த போட்டியை சமன் செய்திருக்கலாம். அத்துடன், இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் ஆட்டம் இழந்த போது இந்திய அணி 333 ரன்கள் பெற்றிருந்தது.

ஆனால்,  அதன்பின்னர் 364 ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சுருண்டது. கருண் நாயர், ஜடேஜா, சர்துல் தாக்கூர், சிராஜ், பும்ரா போன்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இது தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஒருவேளை, இந்திய அணி ஐந்தாவது நாள் மதியம் வரை விளையாடி இருந்தால் இந்த போட்டியை சமன் செய்திருக்கலாம்.  அத்துடன், அடித்த இலக்கை காப்பாறிக்கொள்ள முடியாத நிலைய ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் மோசமான பில்டிங் தான். 

இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் மூன்று கேட்ச்களை தவற விட்டிருக்கிறார். கடைசி இன்னிங்ஸில் பென் டக்கட் 98 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் அடித்த கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் தவறவிட்டார்.

ஒருவேளை, அந்த கேட்சை அவர் பிடித்து இருந்தால், ஆட்டத்தின்  போக்கு மாறி இருக்கும். அதன் பிறகு பென் டக்கட் 149 ரன்கள் குவித்த பின்னர் தான் ஆட்டம் இழந்தார். 

இவ்வாறான ஒரு நிலை ஏற்படும்போது, விராட் கோலி, ரோகித் சர்மா இருந்திருந்தால் நிச்சயம் ஃபில்டர்களை வித்தியாசமாக நிறுத்தி வேகப்பந்து வீச்சாளர்களை ஊக்கவித்து விக்கெட்டுகளை வீழத்தி இருப்பார்கள்.

ஆனால், அதனை செய்யதா கில், புது பந்து கிடைத்தவுடன் பும்ராவை பயன்படுத்தலாம் என நினைக்க, புது பந்து கிடைத்த போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 20 ரன்கள் தான் தேவையாக காணப்பட்டது.

முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் எந்த ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை. இதுவும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

பும்ரா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தால்மூட இந்த போட்டியில் இந்தியா வெற்றியை பெற்றிருக்கலாம். அத்துடன், ஜடேஜா  ஒரு விக்கெட் தான் வீழ்த்தி இருந்தார். 

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நான்கு நாள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், சிறு தவறுகள் காரணமாக இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி உள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google