நீ ஜெய்ச்சிட்ட... முத்தமிட்ட மனைவி.. கட்டி அணைத்து கதறிய விராட் கோலி!

Key Points
  • முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.
  • அதிகபட்சமாக விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். 
நீ ஜெய்ச்சிட்ட... முத்தமிட்ட மனைவி.. கட்டி அணைத்து கதறிய விராட் கோலி!

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி கைப்பற்றி சாதனை படைத்த நிலையில், விராட் கோலி ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.  இந்த வெற்றியைப் பெற்றவுடன் விராட் கோலி மைதானத்திலே முட்டி போட்டு அழுதார்.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். 

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய பஞ்சாப் அணிகள் அதிகபட்சமாக 30 பந்துகளின் 62 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களின் ஆட்டம் இழந்தார்.

இதனால் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து விராட் கோலி மைதானத்தில் அழுதார். 

ஆர்சிபி அணியின் இறுதிப்போட்டியை பார்ப்பதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து அகமதாபாத்திற்கு வந்த டிவில்லியர்ஸ் விராட் கோலியை கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

எதிரணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விராட் கோலியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். இதனை அடுத்து மனைவி அனுஷ்கா சர்மா மைதானத்திற்குள் வந்து விராட் கோலியை கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் விராட் கோலியின் நெற்றியில் முத்தமிட்டார். விராட் கோலி அனுஷ்கா சர்மாவுக்கு முத்தம் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர். 

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google