விராட் கோலியை கேப்டனாக நியமித்திருக்க வேண்டும்... கம்பீர் செய்யவில்லை... ரவி சாஸ்திரி அதிரடி!

Key Points
  • தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் விராட் கோலியை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமித்திருப்பேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 
விராட் கோலியை கேப்டனாக நியமித்திருக்க வேண்டும்... கம்பீர் செய்யவில்லை... ரவி சாஸ்திரி அதிரடி!

தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபி முடிந்த உடனே விராட் கோலியை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமித்திருப்பேன் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த பின்னர், இந்திய அணி ஜூன் 20 முதல் இங்கிலாந்துக்கு எதிராக முக்கியமான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது, சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், “கோலி இப்படி விடைபெற்றது எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த ஓய்வு முடிவு குறித்து சரியான முறையில் பேசியிருக்க வேண்டும். எனக்கு இதில் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்திருந்தால், ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு உடனடியாக அவரை கேப்டனாக நியமித்திருப்பேன்” என்று ரவி சாஸ்த்ரி தெரிவித்தார்.

ரவி சாஸ்திரி 2014 முதல் 2016 வரை, பின்னர் 2017 முதல் 2021 வரை கோலியுடன் இணைந்து செயற்பட்டதுடன், இந்த காலகட்டத்தில் இந்திய அணி பல சாதனைகளை செய்திருந்தது.

2019 ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியதுடன், 2018-19, 2020-21 ஆகிய வருடங்களில் ஆஸ்திரேலியாவில் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தது.

2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமான கோலி,  இந்திய பேட்டிங் வரிசையின் முக்கிய வீரராக மாறியனார். எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கோலியின் டெஸ்ட் பார்ம் வீழ்ச்சியடைந்தது. 

கடந்த வருடம் டி20 கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த கோலி, தற்போது 50 ஓவர் போட்டிகளில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடுவதில் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google