யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது... சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணி!

Key Points
  • தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கின்றது.
யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது... சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணி!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கின்றது.

இந்த போட்டியில் இதற்கு முன் எந்த அணியாலும் செய்ய முடியாத சாதனையை இந்திய அணி செய்ய முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருந்தனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முழு நேர அங்கத்துவம் கொண்ட எந்த ஒரு கிரிக்கெட் அணியும் ஒரே டி20 இன்னிங்ஸில் இரண்டு சதங்களை இதற்கு முன்னர் அடித்ததில்லை. 

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதன் முறையாக ஒரே இன்னிங்ஸில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா சதம் அடித்து அந்த சாதனையை நிகழ்த்தினர்.

அவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்ததுடன், அதுவே சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் மிகப்பெரிய கூட்டணி ரன்கள் ஆகும். 

இந்த போட்டியில் இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த சாதனையை செய்ததுடன், இந்த ஒரே போட்டியில் இந்திய அணி 23 சிக்ஸர்களை அடித்து இருந்தது. 

சஞ்சு சாம்சன் 9 சிக்ஸ், அபிஷேக் சர்மா 4 சிக்ஸ், திலக் வர்மா 10 சிக்ஸ் அடித்துள்ளதுடன், இந்த தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு முறையும், திலக் வர்மா இரண்டு முறையும் சதம் அடித்து உள்ளனர்.

இதன் மூலம் இந்திய அணி ஒரே ஆண்டில் ஏழு சதங்கள் அடித்த அணி என்ற சாதனையை செய்துள்ளதுடன், முன்னதாக ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் சதம் அடித்து இருந்தனர். 

சஞ்சு சாம்சன் வங்கதேச அணிக்கு எதிராக தனது முதல் சதம் அடித்திருந்தார். அதன் பின் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு முறையும், திலக் வர்மா இரண்டு முறையும் சதம் அடித்தனர்.

அத்துடன், சஞ்சு சாம்சன் ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் சேர்த்து படைத்துள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 283 ரன்கள் எடுத்ததுடன்,  இதுவே இந்திய அணியின் இரண்டாவது மிகப்பெரிய டி20 ஸ்கோர் ஆகும். 

இதற்கு முன்னதாக, வங்கதேச அணிக்கு எதிராக  அதிகபட்சமாக இந்தியா 297 ரன்கள் எடுத்திருந்தது.  மேலும், தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோராகவும், வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் ஆகவும் இது அமைந்துள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google