மூன்று போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பிய இந்திய வீரர்... இனி வாய்ப்பே கிடைக்காது!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கருண் நாயர், தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வருகிறார். இத்தொடருக்கு முன், தொடர்ச்சியாக உள்ளூர் தொடர்களில் ரன்களை குவித்தார். 

மூன்று போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பிய இந்திய வீரர்... இனி வாய்ப்பே கிடைக்காது!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கருண் நாயர், தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வருகிறார். இத்தொடருக்கு முன், தொடர்ச்சியாக உள்ளூர் தொடர்களில் ரன்களை குவித்தார். 

அத்துடன், இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில், இந்திய ஏ அணி வீரராக கருண் நாயர் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு இரட்டை சதம் அடித்தார்.  இதனால்தான், கருண் நாயருக்கு, முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய பிளேயிங் 11-ல் இடம் கிடைத்தது. 

ஆனால், அவர் அதனை சிறப்பாக பயன்படுத்தவில்லை. தொடர்ந்து, இரண்டு மற்றும் மூன்றாவது போட்டியிலும் ரன்களை குவிக்காமல் 0, 20, 31, 26, 40, 14 ஆகிய ரன்களைதான் அடித்தார். 

மேலும், இதுவரை மூன்று டெஸ்ட்களிலும், இரு அணிகளின் டாப் 4 பேட்டர்களில், கருண் நாயர் மட்டுமே இன்னமும் அரை சதம் கூட அடிக்கவில்லை. முதல் இரண்டு டெஸ்ட்களில் சொதப்பிய கருண் நாயருக்கு மூன்றாவது டெஸ்டிலும் வாய்ப்பு கொடுத்தனர். 

காரணம், முதல் இரண்டு டெஸ்டிலும் நல்ல துவக்கம் கிடைத்தும், அதனை அவரால் பயன்படுத்த முடியவில்லை. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெரிய ஸ்கோர் அடிப்பார் என்ற நம்பிக்கையில்தான், மீண்டும் இடம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

காரணம், கருண் நாயருக்கு, ஒரு போட்டி நன்றாக வாய்த்தது என்றால், அவரால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். இதனால்தான், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், மூன்றாவது வாய்ப்பையும் கருண் நாயர் தவறவிட்டார். 

இந்திய அணியில், மூன்றாவது இடத்திற்கு, சாய் சுதர்ஷன் தயார் நிலையில் இருக்கிறார். இதனால், அடுத்த இரண்டு டெஸ்ட்களில் சாய் சுதர்ஷன் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் இருவரில் ஒருவரை விளையாட வைக்கலாமே தவிர, கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று கருதப்படுகிறது.

 33 வயதாகிவிட்ட கருண் நாயருக்கு இதுதான், கடைசி சர்வதேச போட்டியாக கூட இருக்கலாம் என்று கூறப்படுவதுடன் அவருக்கு இனியும், அவரை அணியில் சேர்க்க வாய்ப்பில்லை.