எதிரணி வீரரை அடிக்க சென்ற ஷிக்கந்தர் ராசா.. 2 போட்டிகளில் விளையாட அதிரடி தடை

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் மட்டுமே மிச்சம் இருக்க திரில் வெற்றி பெற்றது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
எதிரணி வீரரை அடிக்க சென்ற ஷிக்கந்தர் ராசா.. 2 போட்டிகளில் விளையாட அதிரடி தடை

சிம்பாப்வேக்கு சென்றுள்ளஅயர்லாந்து அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதுடன், முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் இடம்பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் மட்டுமே மிச்சம் இருக்க திரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த போட்டியில் தற்போது இடம்பெற்ற சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பாப்வே அணி கேப்டன் ஷிக்கந்தர் ராசா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அயர்லாந்து வீரர் ஜாஸ் லிட்டில் மற்றும் கோர்டீஸ் கேம்பர் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது இருவரும் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஷிக்கந்தர் ராசா தன்னுடைய பொறுமையை இழந்து பேட்டால் அயர்லாந்து வீரர்களை அடிக்கச் சென்ற நிலையில், அப்போது அங்கு இருந்த நடுவர் சிக்கந்தர் ராசாவை தடுத்து அழைத்துச் சென்றார். 

சிக்கந்தர் ராசாவின் இந்த செயலால் கடுப்பான மற்றொரு அயர்லாந்து வீரர் சிக்கந்தர் ராசாவை அடிக்க செல்ல மற்றொரு நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.

இந்த சம்பவம் ஐசிசி நன்னடத்தை விதிகளுக்கு மீறியது என்பதால் சிக்கந்தர் ராசாவுக்கு 50 சதவீதம் போட்டியிலிருந்து ஊதியத்தை அபராதமாக விதித்த நடுவர்கள் அவரை இரண்டு டி20 போட்டியில் பங்கேற்க தடை விதித்துள்ளனர். 

இதே போன்று நியூசிலாந்து வீரர்கள் கேம்பர் மற்றும் ஜாஸ் லிட்டில் ஆகியோருக்கு போட்டியிலிருந்து 15 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்திருக்கிறது. தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள சிக்கந்தர் ராசா ஐசிசி விதித்துள்ள இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிக்கந்தர் ராசா தான் ரன் அடிக்க ஓடும்போது ஜாஸ் லிட்டில் அதனை தடுத்து தன்னை அவுட் ஆக்க முயன்றதாக கூறியுள்ளதுடன், சிக்கந்தர் ராசாவுக்கு தடை, ஆனால் அயர்லாந்து வீரர்களுக்கு வெறும் 15 சதவீதம் மட்டும்தான் அபராதமா என்று ரசிகர்கள் விமர்ச்சித்து வருகின்றனர்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர