அமெரிக்காவில் இரட்டைக் குடியுரிமைக்கு முற்றுப்புள்ளி? சிக்கலில் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள்

Exclusive Citizenship Act of 2025 எனும் இந்த சட்டத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும், கொலம்பியாவில் பிறந்தவருமான பெர்னி மொரேனோ (Bernie Moreno) முன்வைக்க உள்ளார்.

அமெரிக்காவில் இரட்டைக் குடியுரிமைக்கு முற்றுப்புள்ளி? சிக்கலில் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள்

அமெரிக்காவில் இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) முறையை முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒரு புதிய சட்டம் முன்வைக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exclusive Citizenship Act of 2025 எனும் இந்த சட்டத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும், கொலம்பியாவில் பிறந்தவருமான பெர்னி மொரேனோ (Bernie Moreno) முன்வைக்க உள்ளார்.

இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டால், அமெரிக்காவில் வாழும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், தங்கள் இரு குடியுரிமைகளில் ஒன்றை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்ய வேண்டும்.

அமெரிக்கர்கள் வேறு ஒரு நாட்டின் குடியுரிமை பெற விரும்பினால், அவர்கள் தங்கள் அமெரிக்கக் குடியுரிமையை கைவிட வேண்டும்.

அரசு அதிகாரிகள் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை அடையாளம் காண்பார்கள்.

அவர்களுக்கு ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கப்படும்.

அக்காலக்கெடுக்குள் ஒரு குடியுரிமையைத் தேர்வு செய்யாதவர்கள் அமெரிக்கக் குடியுரிமையை இழப்பார்கள்.

அமெரிக்கக் குடியுரிமையை கைவிடுபவர்கள், வெளிநாட்டவர்களாக கருதப்பட்டு, புலம்பெயர்தல் சட்டத்தின் கீழ் நடத்தப்படுவார்கள்.

பெர்னி மொரேனோ தான் 18 வயதில் கொலம்பிய குடியுரிமையைத் துறந்து, தனிப்பட்ட முறையில் அமெரிக்கக் குடிமகனாக மாறியதாக குறிப்பிடுகிறார். 
இந்த அனுபவமே அவரை இச்சட்டத்தின் மூலம் "உண்மையான குடிமக்கள்" என்ற கொள்கையை வலுப்படுத்த ஊக்கப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், டிரம்ப் ஆட்சியில் ஏற்கனவே கடுமையான புலம்பெயர்தல் கொள்கைகள் அமலில் இருக்க, இந்த புதிய சட்டம் அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கும், குறிப்பாக இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கும் பெரும் சவாலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.