சாய் சுதர்சனுக்கு கிடைத்துள்ள 'சூப்பர்' வாய்ப்பு... கெட்டியாக பிடிப்பாரா?

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதுடன், இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 

சாய் சுதர்சனுக்கு கிடைத்துள்ள 'சூப்பர்' வாய்ப்பு... கெட்டியாக பிடிப்பாரா?

இந்திய அணில் ரோஹித், கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என டபிள்யு.வி.ராமன் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதுடன், இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 

இப்போட்டிகளை தமிழில் வர்ணனை செய்யவுள்ள, இந்திய அணி முன்னாள் வீரர் டபிள்யு.வி.ராமன் அளித்த பேட்டியில், இங்கிலாந்து ஆடுகளம், சூழ்நிலை சவாலாக அமையும். இருப்பினும் நல்ல ஆரம்பமாக இருக்கும் என நம்புவோம்.

இங்கிலாந்து ஆடுகளங்கள் 'வேகத்துக்கு' சாதகமானவை. 'வேகங்கள்' தான் இந்திய அணிக்கு கைகொடுக்க வேண்டும். 

இலண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் கூட வேகப்பந்துவீச்சாளர்கள் தான் மிரட்டுகின்றனர். 

தற்போது அணியில் உள்ள 'ஸ்பின்னர்'களை வைத்து இந்திய அணி சமாளிக்கும். சீனியர் வீரர்கள் ஓய்வு பெறும் போது, புதிய நட்சத்திர வீரர்களை கண்டறியலாம். 

சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்களுக்கு, தற்போது 'சூப்பர்' வாய்ப்பு வந்துள்ளது. இதை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

சாய் சுதர்சனுக்கு 3ஆவது இடம் பொருத்தமாக இருக்கும். சுப்மன் கில் 4ஆவது இடத்தில் வரவேண்டியது இருக்கும். இதனால் சுதர்சன் துவக்கம் தரலாம் அத்துடன், அணியின் பேட்டிங் வரிசைக்கு ஏற்ப, மாற்றம் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.