ரோகித்தை புறக்கணிக்க தீர்மானம்... அணியில் இனி இடமில்லை... கேப்டன் பதவியும் இல்லை!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர், மூன்று வெவ்வேறு அணிகளை முன்னதாக இறுதிப்போட்டி வரை அவர் அழைத்துச் சென்று இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர், மூன்று வெவ்வேறு அணிகளை முன்னதாக இறுதிப்போட்டி வரை அவர் அழைத்துச் சென்று இருக்கிறார்.
இதனால், அவரை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதுடன், அவரை இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என பலரும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணி வட்டாரத்தில் வெளியான ஒரு அதிர்ச்சி தகவலில், ரோகித் சர்மாவை ஒருநாள் அணியில் இருந்து நீக்குவது குறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும், அவர் புறக்கணிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
அத்துடன், ரோகித் சர்மா இல்லாத நிலையில், கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்கப்படுவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், சுப்மன் கில் தான் கேப்டனாக வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் மிகவும் சராசரியாக விளையாடி வருவதுடன், அவரது பேட்டிங் சராசரி 35 என்ற நிலை இருந்தும் அவரை கேப்டனாக நியமித்திருக்கிறது இந்திய அணி நிர்வாகம்.
இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளிலும் சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க திட்டங்கள் நடந்து வருவதாகவும், கூறப்படுகின்றது.
ஒருநாள் அணியைப் பொறுத்தவரை சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஸ்ரேயாஸ் ஐயருடன் ஒப்பிடும்போது, சுப்மன் கில்லின் தலைமைப் பண்பு கேள்விக்குரியதாகவே உள்ளது.
அத்துடன், சுப்மன் கில்லை கேப்டனாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை வீரர்கள் மத்தியில் உள்ளதா? என்ற கேள்வியும் காணப்படுகின்றது. ஒருநாள் அணியைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், முகமது ஷமி என சுப்மன் கில்லை விட அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.
டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை வெளியேற்றிய நிலையில், அவர் தற்போது பும்ரா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல் போன்ற மூத்த வீரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து தொடரை இந்திய அணி கைப்பற்றினால், சுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டனாக வாய்ப்பு உள்ளது என்பதுடன், தோல்வியடைந்த பின்னர் சுப்மன் கில்லை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்தால் அது பல்வேறு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.