இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் எரான் விக்ரமரத்ன தலைமையிலான மறுசீரமைப்புக் குழு நியமித்துள்ள புதிய தெரிவுக்குழு சட்டவிரோதமானது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.