மீகொடையில் கோர விபத்து: தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதி 6 பேர் உயிரிழப்பு
மீகொடையில் தன்சலுக்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் வாகனம் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.