தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாஸ் பாட்லர், நடப்பு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடருக்கு சில மாதங்கள் முன்பிருந்து வீரர்களை தேர்வு செய்து வந்தது. குறிப்பாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போதே இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு சிக்கல் இருந்தது.