கொழும்பு

சிந்துஜா மரணம்: வைத்தியர் ஒருவரும் பணியிடை நீக்கம்

சுகாதார அமைச்சினால் இது தொடர்பான கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிந்துஜா மரணம்: வைத்தியர் ஒருவரும் பணியிடை நீக்கம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மரியராஜ் சிந்துஜா என்ற இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர பணியிடை நீக்கம் செய்யப்படவுள்ளார்.

சுகாதார அமைச்சினால் இது தொடர்பான கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக இரத்தப்போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றச் சாட்டப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மீகொடையில் கோர விபத்து: தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதி 6 பேர் உயிரிழப்பு

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எனினும் இதுவரையில் குறித்த கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையைச் சென்றடையவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புதமிழ் WhatsApp சேனலில் இணையுங்கள்

உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச செய்திகள், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் குறித்த செய்திகளை உங்களுக்கு வழங்குகிறது.

எங்கள் நெட்வொர்க்:
ahafm malaioli seithi news21 colombotamil cinema