கிரிக்கெட் போட்டியின் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீரர்கள்.. பரபரப்பு சம்பவம்..!

Key Points
  • ஷெபோ நடுலி வீசிய பந்தை ரிப்பன் சிக்ஸருக்கு அடித்துள்ளார்.
  • அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்துள்ளார்கள். 
கிரிக்கெட் போட்டியின் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீரர்கள்.. பரபரப்பு சம்பவம்..!

சர்வதேச அணிகள் தங்களது அடுத்த கட்ட வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் வகையில் எமர்ஜிங் மேட்ச் எனப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான போட்டிகளை நடத்தி வருகிறன.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச நாடுகளின் எமர்ஜிங் அணிகள் பங்கேற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றது. 

டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 22 வயதான பேட்ஸ்மேன் ரிப்பன் மோண்டோலுக்கும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஷெபோ நடுலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஷெபோ நடுலி வீசிய பந்தை ரிப்பன் சிக்ஸருக்கு அடித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்துள்ளார்கள். 

அதுதான் இருவருக்கும் மோதல் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விரும்பத்தகாத ஈடுபட்ட இருவர் மீதும் ஐசிசியின் உடைய நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google