கோப்பை வென்றுகொடுத்த கம்பீருக்கு கூடுதல் அதிகாரம்: கோலி-ரோஹித் எதிர்காலம் கேள்விக்குறியா?

புதிய அதிகாரங்களின் படி, அணித் தேர்வு விஷயத்தில் கௌதம் கம்பீரின் முடிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். கம்பீர் விரும்பும் வீரர்களை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும்.


கோப்பை வென்றுகொடுத்த கம்பீருக்கு கூடுதல் அதிகாரம்: கோலி-ரோஹித் எதிர்காலம் கேள்விக்குறியா?

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 இறுதிப் போட்டி மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர்களிலும் கோப்பை வெல்லும் நோக்கில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பிசிசிஐ கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது. இந்த முடிவு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அதிகாரங்களின் படி, அணித் தேர்வு விஷயத்தில் கௌதம் கம்பீரின் முடிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். கம்பீர் விரும்பும் வீரர்களை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும். அதேபோல், கம்பீர் ஒதுக்கும் வீரரை அணியில் சேர்க்க முடியாது. இந்த விஷயத்தில் பிசிசிஐ தலையிடாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமாற்றம் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் எதிர்காலத்தை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கௌதம் கம்பீர் தொடர்ச்சியாக அனுபவம் வாய்ந்த வீரர்களை ஒதுக்கும் போக்கை கடைபிடித்து வருவதால், இந்த புதிய அதிகாரம் மூலம் சீனியர் வீரர்கள் முற்றிலும் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

எனினும், புள்ளிவிவரங்கள் வேறு கதையை சொல்கின்றன. 2025ஆம் ஆண்டில் இந்திய ஒருநாள் அணிக்காக அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். கோலி 13 போட்டிகளில் 65.10 சராசரியில் 3 சதம், 4 அரைசதங்களுடன் 651 ரன்களையும், ரோஹித் 14 போட்டிகளில் 50 சராசரியில் 2 சதம், 4 அரைசதங்களுடன் 650 ரன்களையும் எடுத்துள்ளனர்.

2026ஆம் ஆண்டில் ரோஹித் சர்மாவின் செயல்பாடு சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. 3 போட்டிகளில் 61 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கும் ரோஹித், மறுபக்கம் விராட் கோலி அதே காலகட்டத்தில் 3 போட்டிகளில் 240 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் தொடர்கிறார். இந்த அடிப்படையில், ரோஹித் சர்மா மட்டுமே ஓரங்கட்டப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர்.

குறிப்பாக, ஓபனிங் இடத்திற்கு யாஷஸ்வி ஜெய்ஷ்வால் தயாராக இருப்பதும் ரோஹித்தின் நிலையை பாதிக்கக்கூடும். இடது கை பேட்டராக ஜெய்ஷ்வால் அணியில் இடம்பெற்றால், டாப் ஆர்டரில் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். இந்திய அணி ஜூன் மாத தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும், அவர் சிறப்பாக செயல்பட்டால் படிப்படியாக ஓபனிங் இடத்தை உறுதி செய்துகொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை வெற்றி கௌதம் கம்பீருக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. எனவே, அவர் எடுக்கும் அணித் தேர்வு முடிவுகளுக்கு பெரிய எதிர்ப்புகள் வராது என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக, ஃபார்ம் இழந்த நிலையில் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்கினால், அது பெரிய விமர்சனத்தை சந்திக்காது என்றும் மதிப்பிடப்படுகிறது.

இந்த சூழலில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு முன், ஐபிஎல் 2026 தொடரிலும் ரோஹித் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. விராட் கோலியின் நிலைமை தற்போது உறுதியாக இருந்தாலும், தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு மட்டுமே அவரது இடத்தை உறுதி செய்யும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google