இரண்டாவது டெஸ்ட்டில் இருந்து பும்ரா விலகல்... அதிர்ச்சியில் கில்... எப்போது அணிக்கு திரும்பவார்?
இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அத்துடன், அவர் அதிக ஓவர்களையும் வீசினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் அணிக்கு முதன்மை வேகப்பந்துவீச்சாளராகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உள்ள பும்ரா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அத்துடன், அவர் அதிக ஓவர்களையும் வீசினார்.
அண்மையில், தான் காயத்திலிருந்து மீண்டு வந்த அவரால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என முன்பே அறிவிக்கப்பட்டதுடன், மூன்று போட்டிகளில் தான் அவர் விளையாடுவார் என பிசிசிஐயும் கூறியது.
முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் 24.4 ஓவர்களையும், இரண்டாவது இன்னிங்சில் அவர் 19 ஓவர்களையும் வீசினார். இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது.
ஜூலை 2 நடக்க உள்ள இரண்டாவது போட்டியை தொடர்ந்து ஜூலை 10 அன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாக உள்ளது. அத்துடன், இரண்டாவது டெஸ்ட் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையேயான இடைவெளி மிகவும் குறைவாகவே இருக்கிறது.
எனவே அந்த இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து விளையாடுவது அவருக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது. அவர் இப்போதுதான் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வாகி இருக்கிறார்.
அவர் இரண்டாவது போட்டியில் விளையாடினால் அதுவே அவரது சர்வதேச டெஸ்ட் அறிமுகமாக இருக்கும் என்பதுடன், டி20 வடிவத்தில் அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் முதன்மை பந்துவீச்சாளராக உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்குக் கைகொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.