பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடப்பது என்ன?  யூசுப் விலகியதின் பின்னணி என்ன?

Key Points
  • இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
  • ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் கூட பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி விடுகின்றன. 
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடப்பது என்ன?  யூசுப் விலகியதின் பின்னணி என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே மற்ற அணிகள் மத்தியில் பயம் இருந்த ஒரு காலமும் காணப்பட்டது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயப் அக்தார், முகமது ஷமி, முகமது ஆசிப், முகமது ஆமிர் என ஒவ்வொரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்ற அணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர். 

அதேபோல, பேட்டிங்கிலும் ஜாவேத் மியாண்டாட், சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹப், யூசப் யுஹானா (முகமது யூசுப்), சோயப் மாலிக், ஷாஹித் அப்ரிடி, மிஷ்பா உல் ஹக் என மிரட்டினார்கள்.

ஆனால் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் கூட பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி விடுகின்றன. 

பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சிக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமும் காரணமும் என்று புகார் எழுந்தது. அவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும் அணியை சரியாக வழிநடத்தவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.

மிக முக்கியமாக, அணி வீரர்களைத் தேர்வு செய்வதில் பிரச்சினை என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது. குறிப்பாக, சுழல் பந்துவீச்சாளர் இடத்துக்கு இமாத் வாசிமுக்குப் பதிலாக முகமது நவாஸ் தேர்வு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவர் டி20 உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் அஷ்வினுக்கு ஒயிட் பால் வீசியது, ரன்களை வாரி வழங்கியது என பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார்.

கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி படுதோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலும், தேர்வுக் குழுவிலும் நிறைய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் இருந்து முகமது யூசுப் விலகியுள்ளார். பாகிஸ்தான் அணியில் அவர் மற்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதற்காக அவர் தானே வெளியேறியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ஆனால் அவர் வேறு சில காரணங்களா வெளியேறியுள்ளதாகத் தெரிகிறது.

முகமது யூசுப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆவர். தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கினார். ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளராகவும் செயல்பட்டார். 

இந்நிலையில் தற்போது தேர்வுக் குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இன்னும் பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google