இரண்டாவது டெஸ்ட்டில் இந்த வீரரை சேர்த்தால்... இங்கிலாந்துக்கு ஆப்பு உறுதி! இங்கிலாந்து வீரர் ஓபன் டாக்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா இந்த வீரரை சேர்த்தால், இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் பேசியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா இந்த வீரரை சேர்த்தால், இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் பேசியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியாவில் வெல்ல முடியவில்லை. பென் டக்கெட் 149 ரன்களை அடித்து, இந்தியாவிற்கு சவால்விடும் வகையில் விளையாடி, இங்கிலாந்துக்கு வெற்றியைப் பெற்றுகொடுத்தார்.
ஜூலை 2ஆம் தேதி பெர்மிங்கம்மில் துவங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், இந்திய அணி தோல்வியை சந்தித்தால், தொடர இழக்கும் நிலை ஏற்படும்.
இதனால், முதல் போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து, இரண்டாவது போட்டியில் அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடர்பில் பேசிய, இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் ‘‘பெங்மிங்கம் பிட்சில், சுழல் அதிகமாக இருக்கும். இப்போட்டியில், ஜடேஜாவுடன் மட்டும் இந்திய அணி சென்றால், அது இந்திய அணிக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
ஜடேஜா விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர் கிடையாது. ஓவர்களை விரைவாக வீசுவர். மற்றபடி, அவர் பேட்டர்களை ஆட வைத்து, அதன்மூலம் விக்கெட்டை எடுக்க மட்டுமே முயற்சிப்பார்.
இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும். குல்தீப் ஒரு எக்ஸ் பேக்டர் வீரர். மேட்ச் வின்னிங் திறமை அவரிடம் இருக்கிறது.
பேட்டர்களுக்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்தி விக்கெட்டை எடுக்க முடியும். இதனால், இரண்டாவது போட்டியில் ஷர்தூல் தாகூரை நீக்கிவிட்டு குல்தீப்பை சேர்க்க வேண்டும்.
ஜடேஜா அடித்து ஆட வைத்து, விக்கெட்டை எடுக்க முயற்சிக்கும்போது, குல்தீப் டைட்டடாக லைன், லெந்தில் பந்துவீசும்போது, ஜடேஜாவை ஆடுவதுபோல் ஆடி, குல்தீப்பிடம், இங்கிலாந்து பேட்டர்கள் விக்கெட்களை பறிகொடுக்க வாய்ப்புள்ளது’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குல்தீப் யாதவ் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 22.16 சராசரியில் 56 விக்கெட்களை கைப்பற்றி உள்ளதுடன், ஷர்தூல் தாகூர், 12 டெஸ்ட் போட்டிகளில் 29.36 சாரசரியில் 33 விக்கெட்களை எடுத்துள்ளார்.
ஐபிஎல் 18ஆவது சீசனில், குல்தீப் யாதவ், பிட்ச் முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமாக இருந்தபோதும், டைட்டான லைன், லெந்தில் பந்துவீசி பேட்டர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தினார்.
இப்படிப்பட்டவர், டெஸ்டில், சுழலுக்கு சாதகமான பிட்சில் விளையாடினால், நிச்சயம் மேட்ச் வின்னராக இருப்பார். இதனால், இரண்டாவது டெஸ்டில், குல்தீப் யாதவை நிச்சயம் சேர்த்தாக வேண்டும் என மாண்டி பனேசர் சுட்டிக்காட்டியுள்ளார்.