டிரா ஆக வாய்ப்பே இல்லை... வெற்றி யாருக்கு... கடைசி நாளில் நடக்கவுள்ள டுவிஸ்ட்... ஆப்பு வைப்பாரா பும்ரா?
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் எஞ்சி இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் எஞ்சி இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 350 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவைப்படுகிறது.
இதுவே 10 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் நிச்சயம் இது டிரா என்று ரசிகர்கள் நினைத்திருக்கலம். ஆனால் இது டி20 காலம் என்பதுடன், இங்கிலாந்து அணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டையே டி20 போல் தான் விளையாடுகிறார்கள்.
அத்துடன், ஆடுகளமும் பெரிய அளவு தோய்வு அடையவில்லை என்பதுடன், முற்றிலும் வேகப்பந்துவீச்சுக்கும் கை கொடுக்கவில்லை.
2019 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 359 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து எதிர்கொண்ட போது, ஸ்டோக்ஸ் அபாரமாக நின்று ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற வைத்தார்.
மேலும், ஆஸ்திரேலிய அணி 404 ரன்கள் என்ற இலக்கை வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இதே ஆடுகளத்தில் 1948 ஆம் ஆண்டு எட்டிருக்கிறது.
இதே ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 2017 ஆம் ஆண்டு எட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது 90 ஓவரில் 350 ரன்கள் என்பது நிச்சயம் இங்கிலாந்தால் எடுக்க முடியும்.
ஆனால், இந்திய அணியில் உள்ள உலகத்தரம் வாய்ந்த வீரர் பும்ராவின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்வது என்பது கடினமானது என்பதால், இதனால் இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடுகிறேன் என முடிவு எடுத்தால் நிச்சயம் அதற்கு பும்ரா ஆப்பு வைப்பார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட் இழக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால், ரசித் கிருஷ்ணா, முஹம்மது சிராஜ், சர்துல் தாக்கூர் மற்றும் ஜடேஜா ஆகியோர் பெரிய அளவில் பந்துவீச்சில் சாதிக்கவில்லை என்ற நிலையில், ஐந்தாவது நாள் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.