முழு பெண்ணாக மாறிவிட்டேன்.. கிரிக்கெட் விளையாட விடுங்க... அனயா கோரிக்கை

Key Points
  • மாற்றுப் பாலினத்தவர்கள் அல்லது ஆண்/பெண்ணாக இருந்து மாற்றுப் பாலினமாக சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது என ஐசிசி கடந்த...
முழு பெண்ணாக மாறிவிட்டேன்.. கிரிக்கெட் விளையாட விடுங்க... அனயா கோரிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரும் ஆன சஞ்சய் பங்கரின் மகனாக இருந்த ஆரியன் பங்கர் மும்பை அணியில் ஜூனியர் பிரிவில் விளையாடியவர். 

சர்பராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரோடு விளையாடி அவர்களுடன் நட்பு கொண்டிருந்த அவர்,  தன்னை பெண்ணாக உணர்ந்து அதற்கான உடல் ரீதியான மாற்று சிகிச்சைகளை செய்துள்ளார்.

இந்த நிலையில், மாற்றுப் பாலினத்தவர்கள் அல்லது ஆண்/பெண்ணாக இருந்து மாற்றுப் பாலினமாக சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது என ஐசிசி கடந்த ஆண்டு ஒரு விதியை அறிவித்திருந்தது. 

இதனையடுத்து, அனயா பங்கர் தான் முற்றிலும் பெண்ணாக மாறிவிட்டதற்கான மருத்துவ அறிக்கையை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் முழுவதுமாக ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையாக மாறிவிட்டதாக கூறி உள்ளார்.

கடந்த ஓராண்டாக ஹார்மோன் சிகிச்சை ஆரம்பித்து அங்கிருந்து பல்வேறு ஆய்வுகளை செய்து இந்தச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த ஆய்வு அறிக்கை உண்மையான தகவல்களைச் சொல்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அத்துடன், இந்த அறிக்கையை பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு சமர்ப்பித்திருப்பதாகவும், இதன் மூலம் ஒரு விவாதத்தைத் ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் அனயா பங்கர் கூறியிருக்கிறார்.

கிரிக்கெட்டில் மாற்றுப் பாலினத்தவருக்கான இடத்தை உருவாக்க முயற்சிப்பதாக கூறிய அவர், “நான் மகளிர் கிரிக்கெட் ஆடுவதற்குத் தகுதியானவள் என்று அறிவியல் சொல்லும் இந்த உண்மையை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளுமா?“ என்று கேட்டுள்ளார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google