ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். இதற்கு முன் எப்போதும் இருந்ததை விட அவர் விக்கெட்டை பற்றி யோசிக்காமல் முதல் 10 ஓவர்களிலேயே எதிரணியை திணற வைக்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.
இந்தியா முதலில் பேட்டிங் ஆடுவது சாதகமான முடிவாகும். கொல்கத்தா பிட்ச் நேரம் செல்ல செல்ல மெதுவான பிட்சாக மாறும் என முன்னாள் வீரர்கள் போட்டிக்கு முன் பிட்ச்சை பார்த்து கருத்து கூறி இருந்தனர்.
கொல்கத்தாவில் 300 ரன் எடுக்கலாம் என்றாலும், அந்த பிட்ச்சில் மற்றொரு சிக்கல் உள்ளது. அந்த பிட்ச் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும். பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும்.