2026 டி20 உலகக்கோப்பையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா–பாகிஸ்தான் மோதல் கொழும்பில் தொடங்கியுள்ளது. இந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தற்போது அணியுடன் இணைந்துள்ளார். அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் கூடுதல் வலு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.