ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம்

ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியும் பேராசிரியருமான மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருகிறது.

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்ற CID அதிகாரிகள் அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்கின்றனர். இந்த விசாரணையின் தன்மை அல்லது இது வேறு எந்த விசாரணையுடன் தொடர்புடையது என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.