லண்டன் ரகசிய குடியிருப்புகளில் நடந்த எப்ஸ்டீனின் பாலியல் அத்துமீறல்கள் அம்பலம்
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன், லண்டனின் மிக உயர்தரப் பகுதிகளில் ரகசியமாக வீடுகளை வாடகைக்கு எடுத்து, தான் கடத்தி வந்த பெண்களைச் சிறைவைத்துத் துன்புறுத்தியது பிபிசி (BBC) நடத்திய விரிவான புலனாய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எப்ஸ்டீன் தொடர்பான ரகசியக் கோப்புகளை ஆய்வு செய்ததில், லண்டனின் கென்சிங்டன் மற்றும் செ Chelseaல்சி பகுதிகளில் அவர் நான்கு சொகுசு குடியிருப்புகளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, வர்ஜீனியா கிஃபெரே அளித்த புகாரைப் பிரிட்டன் காவல்துறை விசாரிக்கத் தவறியதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட எப்ஸ்டீன், ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெண்களை லண்டனுக்குக் கடத்தி வந்துள்ளார்.
இந்தக் குடியிருப்புகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள், எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் வலையமைப்பிற்காகப் புதிய பெண்களைத் தேடித் தரும்படி வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் அடிக்கடி பாரிஸ் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான மின்னஞ்சல் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை ஆதாரங்களும் சிக்கியுள்ளன. எப்ஸ்டீன் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு வரை லண்டனில் அவரது சட்டவிரோதச் செயல்பாடுகள் தடையின்றித் தொடர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதே இந்தப் பாதிப்புகளுக்குக் காரணம் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
