நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.. செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து
செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். இத்தகைய செவ்வாய் குரு ஆளும் மீன ராசியில் இருந்து, தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார். சொந்த ராசிக்கு செவ்வாய் செல்வதால், இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது ஆகும்.

நாளைய தினம் 27 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தில் செவ்வாய் ஆற்றல் மற்றும் சக்தியின் ஆதாரமாக கருதப்படுகிறது.
செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். இத்தகைய செவ்வாய் குரு ஆளும் மீன ராசியில் இருந்து, தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார். சொந்த ராசிக்கு செவ்வாய் செல்வதால், இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது ஆகும்.
செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் எல்லாம் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். பணியிடத்தில் சண்டைகளைத் தவிர்த்திடுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் இரத்தம் தொடர்பான நோய்கள், விபத்துகள் அல்லது அறுவை சிகிச்சைகளை சந்திக்க நேரிடும். எனவே வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். அளவாக சாப்பிடுங்கள். ஜங்க் உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சியால் பெரும்பாலான நேரங்களில் கோபமாகவும் விரக்தியாகவும் இருப்பார்கள். உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காது. உங்களின் தவறான பேச்சு குடும்பத்தில் சச்சரவுகளுக்கு வழிவகுக்கும். உணவுகளில் கவனம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் ஆரோக்கியம் மோசமடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் நன்றாக நடந்து கொள்வார்கள். இந்த காலத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். இக்காலத்தில் உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் செலவுகளை கவனியுங்கள்.
செவ்வாய் தோஷத்தைப் போக்கும் பரிகாரங்கள்
- செவ்வாய் பெயர்ச்சியால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நவகிரகம் அல்லது காயத்ரி மந்திரம் சொல்லுங்கள்.
- செவ்வாய் கிழமை விரதம் இருங்கள்.
- செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செம்பு அல்லது வெள்ளி மோதிரத்தை அணிவது நல்லது.
- செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இடது கையில் வெள்ளி வளையல் அணிய வேண்டும்.
- செவ்வாய் கிழமைகளில் பசுக்களுக்கு வெல்லத்தைக் கொடுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |