இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்பு..!
இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் பொறுப்பேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் பொறுப்பேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவருடன் இலங்கை வட மாகாண ஆளுநராக பி.எம்.எஸ். சார்ல்ஸ், வட மேல் மாகாண ஆளுநராக லட்சுமன் யாப்பா ஆகியோர் பதவியேற்று கொண்டனர்
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செந்தில் தொண்டமான் இளம் வயதில் ஊவா மாகாண முதல்-அமைச்சர், அமைச்சர், பிரதமரின் இணைப்பு செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து, செயலாற்றினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |