பாரியளவில் நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரித்தது எரிபொருள் விலை
நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• பெட்ரோல் 92 - ரூ.338
• பெட்ரோல் 95 - ரூ.367
• பெட்ரோல் யூரோ 3 - ரூ. 347
• ஓட்டோ டீசல்- ரூ. 289
• சூப்பர் டீசல் - ரூ. 327