டி20 உலகக்கிண்ணம்: வீரரின் முகத்தை பதம் பார்த்த பந்து
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் பௌலர்கள் தொடர்ந்து மிரட்டலாக பந்துவீச ஆரம்பித்தார்கள்.

ICC T20 World Cup : டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி இந்தியா, சிம்பாப்வே அணிகளுக்கு எதிராக கடைசி பந்துவரை போராடி தோற்றது.
குறிப்பாக, கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெற்றி வாய்ப்பு இருந்தும் பாகிஸ்தான் அணி தோற்றதுதான், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி தனது மூன்றாவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்கியது.
முதல் இரண்டு போட்டிகளில், குறிப்பாக சிம்பாப்வேக்கு எதிராக தோற்றதால், இன்று நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பௌலர்கள் உக்கிரமாக பந்துவீசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
pic.twitter.com/Mwu4pMQvrW — Jalaluddin Sarkar (Thackeray) ???????? (@JalaluddinSark8) October 30, 2022
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் பௌலர்கள் தொடர்ந்து மிரட்டலாக பந்துவீச ஆரம்பித்தார்கள். பெர்த் மைதானத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் என அனைத்தும் இருந்தது.
ஷாஹீ்ன் அஃப்ரிடி, நஷிம் ஷா, ஹரிஸ் ராவுஃப் ஆகியோர் இதனை பயன்படுத்தி நெதர்லாந்து பேட்டர்களை கறதவிட்டனர்.
குறிப்பாக 5.5 ஆவது ஓவரில் ஹரிஸ் ராவுஃப் வீசிய பவுன்சரை பாஸ் டி லிடி எதிர்கொண்டபோது, பந்து ஹெல்மட்டிற்குள் புகுந்து கண்களுக்குள் கீழ் பட்டது.
லிடி உடனே கீழே சாய்ந்தார். அவரது கண்களுக்கு கீழ் ரத்தம் வந்தது. இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவர் உடனடியாக பெவிலியன் திரும்பினார். இது அந்து அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது. ஏனெனில் அடுத்து களமிறங்கிய மற்ற நெதர்லாந்து பேட்டர்களும் சிறப்பாக செயல்படவில்லை.
அதிகபட்சமாக ஆக்கர்மேன் 27, எட்வர்ட்ஸ் 15 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் சேர்த்ததால், நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 91/9 ரன்களை மட்டுமே சேர்த்தது.