மதுரையில் சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞர் ஒருவர், அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை சிலைமான் பகுதியை சேர்ந்த 22 வயதான சதீஷ், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்த விடயம் சிறுமியின் வீட்டிற்குத் தெரிய வந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சதீஷ் வீட்டிற்குச் சென்று அவரை கடுமையாக எச்சிரித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 23 ஆம் திகதி இரவு வீட்டிலிருந்து கடைக்குச் சென்ற சிறுமி, திடீரென்று காணாமல் போய் உள்ளார்.
எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுதியின் தாய் புகார் அளித்துள்ளார்.
விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு சிறுமியை சதீஷ் கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து, 2 நாட்கள் கழித்து, அதிரடியாகச் சிறுமியை மீட்டதுடன், சதீஷை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில்; சதீஷ், சிறுமியைக் கடத்தி 2 நாட்களாகத் தொடர்ந்து வன்புணர்வு செய்தது தெரிய வந்தது.
செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil
Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.