முதலை வாயிலிருந்து உயிர் தப்பிய நபர்
முதலில் சுறாமீன் தம்மைத் தாக்கியதாக நினைத்தார். பின்பு அது முதலை என்பதை உணர்ந்தார்.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், குழாய்மூலம் சுவாசிக்கும் சாதனத்தைப் பயன்படுத்திக் கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது முதலை ஒன்று அவரைத் தாக்கியது.
மார்க்கஸ் மெக்கோவன் (Marcus McGowan)என்ற குறித்த நபர் முதலையின் வாயைத் தமது கைகளால் திறந்து உயிர் தப்பினார்
மெக்கோவன் முதலில் சுறாமீன் தம்மைத் தாக்கியதாக நினைத்தார். பின்பு அது முதலை என்பதை உணர்ந்தார்.
அதன் வாயைத் திறந்து தன் தலையை வெளியே எடுத்த அவர், முதலை அவரை மீண்டும் தாக்க முயன்றதாகக் கூறினார். ஆனால் அவர் அதனிடமிருந்து தப்பினார்.
அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த படகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |