நடுவானில் விமானத்தின் கதவை திறந்து காத்து வாங்கிய பயணி!
194 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகாலக் கதவை பயணி ஒருவர் திடீரெனத் திறந்தார்.

194 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகாலக் கதவை பயணி ஒருவர் திடீரெனத் திறந்தார்.
இதனால், பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
தென் கொரியாவில் ஜேஜூ என்ற தீவில் இருந்து அந்த விமானம் டாயேஜூ என்ற நகருக்கு பறந்துக் கொண்டிருந்தது.
ஒருமணி நேரப்பயணத்திற்குப் பின் தரையிறங்குவதற்காக 700 அடி உயரத்தில் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது பயணி கதவைத் திறந்துவிட்டார்.
இதையடுத்து அவரை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |