125 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்டார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை எதிர்வரும் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த தினத்தில் வழக்குடன் தொடர்புடைய கணினி சாட்சிகள் அனைத்தையும் பிரதிவாதிகள் தரப்புக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்கள் சிலவற்றை விடுவிப்பது தொடர்பில் 125 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்டதாக தெரிவித்து குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் 2 தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளை மிஸ் பண்ணாமல் தெரிஞ்சுக்கோங்க!
Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
#TamilNews, #SriLanka, #Colombo, #lka #TamilSportsNews, #TamilCinemaNews, #BiggBossTamil